பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசு!! வட்டியை கணக்கில் வரவு வைக்க தொடங்கியது அரசு, உடனே செக் பண்ணுங்க
EPFO Update: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் வட்டி வரவு வைக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. : அலுவலக பணிகளில் பணிபுரியும் அனைவரிடமும் பெரும்பாலும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் பிஎஃப் கணக்கு இருக்கும். இதில் ஊழியர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துகிறார்கள். ஊழியர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் பணிபுரியும் நிறுவனமும் அவர்களது கணக்கில் அதே அளவு தொகையை செலுத்துகிறது. எனினும், நிறுவனம் செலுத்தும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் -க்கும் ஒரு பகுதி இபிஎஸ் -க்கும் செல்கிறது. பொதுவாக இபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்படும் பணம் பணி ஓய்வு காலத்தை கருத்தில்கொண்டே சேமிக்கப்படுகின்றது. எனினும், அதற்கு முன்னரும் அவசர தேவைகளோ, அத்தியாவசிய தேவைகளோ ஏற்பட்டால், இந்த தொகை நமக்கு கை கொடுக்கிறது. பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் அறிவித்தபடி, வர